/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

ராணிப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி இன்று ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் புதிய வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச் சாவடிகளிலும், அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Feb 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...