/* */

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தும் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் முகுந்தன்.

கலவைடுத்த வேம்பியில் கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலூக்காவைச் சேர்ந்த வேம்பியில் பொதுமக்கள் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. அதில், திமிரி வட்டார மருத்துவர் ராஜேஷ், செவிலியர்கள் கலா, சித்ரா, சாந்தி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கீதா, ஆகியோர் கிராமத்தில் வீடு வீடாகச் பொதுமக்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது, அதேபகுதி இந்திராநகரைச் சேர்ந்த முகுந்தன்(21) என்ற வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விஏஓ கீதா தடுப்பூசி போடவில்லை என்றால் போட்டுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், விஏஓ வை ஆபாசமாக பேசியும் அங்கு மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடுவதை தடுத்துள்ளார்.

இதுகுறித்து விஏஓ கீதா கலவைப் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்தப் போலீசார். முகுந்தனைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 23 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...