/* */

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி: துரிதமாக மீட்ட தீயணைப்புப்படையினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கால் தவறி கிணற்றில் விழுந்த சிறுமியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாமந்திபுரம் புதுக்காலனி தெருவைச் சேர்ந்த வெங்கடேசன். அவரது மகள் மேனகா (15), அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை 6மணியளவில் அப்பகுதியில் உள்ள வயலில் மேனகா சென்ற போது, திடீரென மாடு ஒன்று சிறுமியைத் துரத்தியது. பயந்து ஓடிய சிறுமி மேனகா அங்குள்ள 75அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்ததால் சிறுமி மேனகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

கிணற்றில் இருந்த பாறையைப் பற்றியபடி கூச்சலிட்டார். சிறுமியின் அலறலைக்கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் வந்து் சிறுமியை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் ஆற்காடு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த சிறுமி லேசான காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திமிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் .திமிரி போலீஸார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 4:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்