/* */

ஆற்காடு நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க

ஆற்காடு நகரமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது

HIGHLIGHTS

ஆற்காடு நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய  தி.மு.க
X

ஆற்காடு நகராட்சிக்கு நடைபெற்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேவி பென்ஸ்பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் கீதாசுந்தர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 26 வாக்குகள் பெற்று தேவி பென்ஸ்பாண்டியன் வெற்றி பெற்றார்.

மாலை நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் டாக்டர் பவளக்கொடி சரவணன், அ.தி.மு.க. சார்பில் உதயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் டாக்டர் பவளக்கொடி சரவணன் 26 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவி பென்ஸ்பாண்டியன், துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் ஆகியோருக்கு நகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Updated On: 5 March 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...