/* */

கொசுக்களின் கூடாரமான கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.

கலவையில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் கூடாரமாக விளங்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

கொசுக்களின் கூடாரமான கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.
X

தூர் வாரப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் சுமார்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். அதில் சென்னசமுத்திரம் செல்லும் பிரதான சாலை கலவையிலுள்ள புகழ்பெற்ற கமலக் கன்னியம்மன் கோயில் , அங்காளம்மன்கோயில் மற்றும் முருகன் கோயில் ஆகியவற்றிற்கு செல்லும் முக்கிய சாலையில் உள்ளது. மேற்படி சாலையில் எப்போதுமே உள்ளூர்,வெளியூர் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த கழிவுநீர்க் கால்வாய் பலமாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் தொற்று நோயைபரப்பும் கொசுக்களின் கூடாரமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

இதுதொடர்பாக கலவை மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவேண்டி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசிவருவதாக கூறப்படுகிறது.

எனவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ள கால்வாயை விரைந்து சீரமைத்திட கலவைப் பொதுமக்கள் , சம்பந்தபட்ட பேரூராட்சி உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 6 Nov 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்