ஆற்காடு அருகே கிணற்றில் கார் கவிழுந்து ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழப்பு

ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் கிணற்றில் கார் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு அருகே கிணற்றில் கார் கவிழுந்து ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழப்பு
X

கிணற்றில் விழுந்த இருவரை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கோபி(40) ,ஐடி கம்பெனி ஊழியர். திருமணமாகி மனைவி மற்றுமு் பிள்ளைகளுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், கோபி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாந்தாங்கலைச் சேர்ந்த டிரைவர் தினேஷ் என்பவருடன் காரில் திமிரி அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றார்.

அங்கு அவரது குடும்பத்தினரை இறக்கிவிட்ட பின்பு கோபி தானே காரில் அமர்ந்து டிரைவர் தினேஷுடன் காரை பின்னால் நகர்த்தினார். .அப்போது பின்புறமாகவே சென்ற கார், துரதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த இருந்த 70அடி ஆழ கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து காரிலிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். இருப்பினும் கோபி பரிதாபமாக பலியாகினார். தினேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திமிரி போலீஸார் ஆற்காடு தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான மீட்புபடையினர் தினேஷையும், கோபியின் சடலத்தையும் மீட்டனர். இதனையடுத்து திமிரி போலீஸார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Aug 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
  3. நத்தம்
    நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
  4. திருவள்ளூர்
    கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
  5. திருவள்ளூர்
    குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  7. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  8. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  9. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...