உள்ளாட்சித்தேர்தல்: ஆற்காடு ஒன்றியத்தில் இன்று 102 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித்தேர்தல்: ஆற்காடு ஒன்றியத்தில் இன்று 102 பேர் வேட்புமனு தாக்கல்
இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் ஆற்காடு ஒன்றியத்தில் இன்று 102 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் ஆற்காடு ஒன்றியத்தில் இன்று (21.09.2021) ஒன்றிய கவுன்சிலருக்கு 6 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 10 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 86 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 17 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 67 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 419 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story