எருதுவிடும் போட்டி, திரளான காளைகள் பங்கேற்பு

ராணிப்பேட்டை,மாங்குப்பம் பகுதியில் எருதுவிடும் போட்டி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த மாங்குப்பம் பகுதியில் தைத் திருநாளை முன்னிட்டு எருது விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ., காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்கும் எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வர்ணம் பூசி ஜோடனை செய்து மேள தாளங்களுடன் அழைத்து வரப்பட்டன. பின்னர் எருதுகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என உறுதிமொழி ஏற்றனர்.
அதன் பிறகு வாடிவாசல் திறக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டியில் களம் இறக்கப்பட்டது. இதில் அதிக வேகம் ஓடிய மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் போட்டியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மேலும் எருது விழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu