/* */

காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே மேலபுலம்புதூரில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது
X

காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் மேலபுலம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலகம் பின்புறமாக இருந்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சாக்கு மூட்டையுடன் 3 பேர் வந்தனர். அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டபோது சாக்கு மூட்டையில் மணல் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மூவரும் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த எழிலரசன் (வயது 20), கணேசன் (24), ரோகித் (21) என்றும் அப்பகுதியில் உள்ள கசக்கால்வாயில் இருந்து கள்ளத்தனமாக மணல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...