/* */

அரக்கோணம் அருகே மண் கடத்தல்; லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே மண் கடத்தல்; லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
X

பைல் படம்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் ஏரியில் மர்ம நபர்கள் சிலர்பொக்லைன் மூலம் கிராவல் மண் எடுத்து லாரியில் கடத்திச்செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது.

.இதுகுறித்து, அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் அங்கு சென்றார்.

அப்போது, அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம மண்ணை எடுத்து லாரியில் கொட்டிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் தாசில்தாரை பார்த்து அப்படியே விட்டு தப்பி ஓடினர். உடனே வட்டாட்சியர், அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார்.

பின்னர், இதுகுறித்து வட்டாட்சியர் பழனிராஜன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்து, பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்தார். இதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து மண் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Updated On: 2 Aug 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது