மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மைய 52வது ஆண்டு விழா

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 52 வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த விழாவில் மையத்தின் DIG ராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தின் நிலைய தளபதி ஆர்.வினோத் குமார் ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பில் மையத்தின் பயிற்சி வீரர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆண்டு விழாவில் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஒத்திகை, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவிற்கு அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப் (CISF) அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu