/* */

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை

அரக்கோணத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தேசியபேரிடர்மீட்புப் படையினருடன் இணைந்து பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை
X

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நடைபெற்றது 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மண்டலப் பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. அதேபோல அருகிலேயே மத்திய தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலியன் உள்ளது .

இந்நிலையில் இருபடையினரும் மாநில தீயணைப்படையிருடன் சேர்ந்து நிலநடுக்கம் போன்ற பேரிடர்களில் கட்டிடம் இடிந்த விழுந்து தகவல் கிடைத்தும் மீட்புப்பணிகளில் விரைவாக ஈடுபடுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சிஐஎஸ்எப் பயிற்சி வளாகத்தில் நடந்தது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தத்ரூபமாக செய்து காட்டினர்..

அதனைத்தொடர்ந்துமீட்கப்பட்ட வர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தல் போன்றவைகளின் ஒத்திகைகள் நடந்தன.

ஒத்திகைகளில் சிஐஎஸ்எப் கமாண்டன்ட் கவுரவ்தோமர் தலைமையில் 60 வீரர்கள், என்டிஆர்எப் கமாண்டன்ட் கபில்வர்மா தலைமையில் 35 வீரர்கள் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Dec 2021 3:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்