அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

X
By - D.Sathiya narayanan, Reporter |7 Aug 2021 4:08 PM IST
வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது போலீசார் செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார் .
அதனைத்தொடர்ந்து அவர் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் .
அதன்பேரில், போலீசர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணம், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, அம்மனூர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu