/* */

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சேர்ந்தவர் பாபு (38)இவரது மனைவி கிருஷ்ணவேணி (32) இருவரும் சேர்ந்து அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தனர் .

பாபு, வியாபாரத்திற்காக சிலரிடம் கடன் வாங்கியதாகவும் அதை திருப்பி செலுத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடையில் வியாபாரத்தின் போது பாபுவிடம் , கடன் கொடுத்தவர் ஒருவர் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது.இதன் காரணமாக வீட்டுக்குப்போன கிருஷ்ணவேணி தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற பாபு மனைவி தூக்கில் சடலமாக தொங்கியது கண்ட அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அரக்கோணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Updated On: 15 Oct 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்