/* */

ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாட்டுப்பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய  நாட்டுப்புற கலைஞர்கள்
X

திருவாலங்காடு ரயில்நிலையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நாட்டுப்புறக் கலைஞர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அதில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று கொரோனோ விழிப்புணர்வு ஏற்படும் வகையில், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தினர்.

தடுப்பூசிப் போட்டுக்கொள்வதின் அவசியம் குறித்தும் இசையமைத்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், பயணிகளுக்கு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இதனையடுத்து, விழிப்புணர்வு நினைவாகக் பயணிகளுக்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, பழ மரக்கன்றுகளை வழங்கினார்.

அருகில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆகியோருடன், திருவாலங்காடு ரயில் நிலைய அதிகாரி அம்ஜித், கிராம நிர்வாக அலுவலர் பாலசந்தர் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 24 Aug 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...