/* */

படிகட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு

நெமிலியடுத்த பள்ளூரில் தனியார் பேருந்தில் படிகட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

படிகட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X

படியில் பயணம் செய்து பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியடுத்த புதுக்கண்டிக்கையைச் சேர்ந்த்ஜெகன் என்பவர் மகன் தினேஷ்குமார்(19), இவர் காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .

தினேஷ்குமார் கல்லூரிக்குச் சென்று வழக்கம்போல காஞ்சிபுரத்திலிருந்து தனியார் பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பினார்.

அதில் தினேஷ்குமார் படியில் நின்று பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது . வழியில் நெமிலியடுத்த பள்ளூர் பஜனைக்கோயில் அருகே பருந்து வந்து கொண்டிருந்தபோது தினேஷ்குமார் கீழேத் தவறிவிழுந்தார். அப்போது, அவரது வயிற்றுப்பகுதியில் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. .

அதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெமிலிப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் ..

Updated On: 12 Dec 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  4. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  6. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  7. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  8. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  9. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?