அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
X

அரக்கோணம் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற புகழேத்தி கணேஷ்.

அரக்கோணம் புதிய டிஎஸ்பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார்.

இராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அரக்கோணம், இராணிப்பேட்டை ஆகிய இரு உட்கோட்டங்கள் உள்ளது.

அரக்கோணம் துணைக்காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மனோகரன் சென்னைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் புதிய டிஎஸ்பியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அரக்கோணம் டிஎஸ்பியாக புகழேத்தி கணேஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags

Next Story
ai in future agriculture