அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்
X

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்டஆட்சியர் 

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்

அரக்கோணம், சோளிங்கர்,நெமிலி வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, மற்றும் கலவை ஆகிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஜமாபந்தி நிறைவடைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அரக்கோணம் வட்டாட்சியர் தலைமை வகித்தார். சிறப்பு அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளான,48 பேருக்கு வீட்டுமனை பட்.டா, திருமண உதவி, பிற்படுத்தபட்டவர்களுக்கு தையல்மிஷன், சலவைப் பெட்டி மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

Next Story