மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கோணலம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35), என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார்.சந்திரன் நிலத்திற்கு அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலில் மீன் பிடிப்பதற்காக தனது மகனுடன் காலையில், செல்வம் வயலை கடந்து பாக்கியராஜ் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி வயலில் விழுந்து பாக்கியராஜ் துடித்துள்ளார்.
இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்பதற்காக முயற்சி செய்யும்போது மின்சாரம் தாக்கி மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் என்பவர் தனது வயலில் உள்ள பயிர்களை எலியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வைத்த மின் வெளியில் சிக்கி பாக்கியராஜ் உயிரிழந்துள்ளார்.அந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் மீன் வளத்துறை வருவாய்த்துறை உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu