ஒருவழிப் பாதையில் பயணித்த ஆட்டோ - மாவட்ட ஆட்சியர் வாகனத்த்தில் மோத வந்தது.

ஒருவழிப் பாதையில் பயணித்த ஆட்டோ மாவட்ட ஆட்சியர் வாகனத்த்தில் மோத வந்தது. ஆட்டோவை நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினார் மாவட்ட ஆட்சியர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு முப்பது வெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வாக்காளர் படிவத்தில் பெயர் நீக்கம் மற்றும் சேர்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் A.R. கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் தனது காரில் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற போது ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்றபோது ஒருவழிப் பாதையில் ஆட்சியர் வாகனம் சென்றபோது எதிரே ஆட்டோ ஒன்று அதிவேகமாக வாகனத்தை மோதும் அளவிற்கு வந்தபோது ஆட்சியரின் வாகன ஓட்டி சுதாரித்து வாகனத்தை நிறுத்தி விட்டார். பின்னர் ஆட்சியரின் உதவியாளர், காவலர், வாகன ஓட்டி என சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆட்டோ ஓட்டுனரை வரவழைத்து ஒருவழிப் பாதையில் அதிவேகமாக வந்த ஓட்டுனரை கடுமையாக எச்சரித்து ஆட்டோவை திருப்பி அனுப்பினார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகாம்களை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 3 ஆயிரத்து 287 வாக்காளர் தற்போது உள்ளனர் இதில் புதிதாக பெறப்பட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் 26 ஆயிரத்து 687 பேர் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த படிவங்கள் அனைத்தும் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை வீடு வீடாக சென்று அதிகாரிகள் சரிசெய்ய பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் தங்களுடைய பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வருகின்ற 15. 12 .2020 வரை படிவங்கள் பெறப்படும் எனவும், 20 .1.2021 ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் தெரிவித்துள்ளார்

Tags

Next Story