இராமநாதபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதிரடி ரெய்டு நடத்துவதை நிறுத்த வேண்டும், அதிகாரிகள் மட்ட அளவிலான ஊழலை தடுத்து நிறுத்தவேண்டும், அரசியல்வாதிகள் சமூக விரோதிகளின் அத்துமீறல் செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும், சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu