/* */

தேங்கி நிற்கும் கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்

தொண்டியில் தேங்கி நிற்கும் கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்.

HIGHLIGHTS

தேங்கி நிற்கும் கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி மாவட்டத்தில் மிகப்பெரிய பேரூராட்சியாகும். இங்கு மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்தும், பிளாஸ்டிக் பாட்டில்கள் நெகிழி பைகள் ஆகியவை தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனை சரி செய்திட பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்பொழுது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி வருகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சுகாதாரத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...