/* */

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்
X

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திரர் நகர் கிராம மக்கள்.

இராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம் அடுத்த தேவேந்திரர் நகர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

பலமுறை ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து இன்று அடுப்பு, அரிசி, பருப்பு உள்ளிட்ட தட்டுமுட்டுச் சாமான்களுடன் கிராம மக்கள் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கேயே அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்ததால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராம மக்கள் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Feb 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்