தேசிய மக்கள் நீதிமன்றம்: 53 வழக்குகளில் ரூ.1 கோடி மதிப்பில் சமரச தீர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் 53 வழக்குகளில் ரூ.1 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகிய வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சிட்டிபாபு மற்றும் வக்கீல்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி கூறுகையில், தேசிய மக்கள் நீதிமன்றமானது ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய நீதிமன்றங்களில் 5 அமர்வுகளாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 45 சிறு குற்ற வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 27 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூ.3 லட்சத்து 22ஆயிரத்து 700 அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 58 வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.93லட்சத்து 95ஆயிரம் அறிவிக்கப்பட்டது.92 சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 7 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 316 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 53 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தீர்வுத் தொகையாக ரூ.1 கோடியே 3லட்சத்து 27ஆயிரத்து 700 அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu