100% வாக்களிக்க வலியுறுத்தி கொடி அணிவகுப்பு

X
By - Saral, Reporter |24 March 2021 9:59 PM IST
காவல் துறை, துணை ராணுவப்படையினர் நடத்திய கொடி அணிவகுப்பு
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் 50 க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 50க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினர் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் உட்பட திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டிணம் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu