/* */

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி
X

திருவாடானையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டி நகரில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சப்கலெக்டர் அர்ச்சனா, உதவி இயக்குநர் விசாலி ஆகியோர் தலைமையிலும் திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ஆகியோர் முன்னிலையில் டிஎஸ்பி., பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்க நடத்தப்பட்டது.

ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே வாக்காளர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டு நடைபெற்றது. இதில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர்கள் அமுதன், புல்லாணி, விஏஓ.,கள் ராஜேஷ், நம்பு ராஜேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 23 March 2021 9:15 AM GMT

Related News