/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமைவீடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் சந்திரகலா ஆய்வு.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நேரில் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அவ்வப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரனூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், பசுமைவீடு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமான பணிகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப் பண்னைத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளார் குழுக்களுக்கு பண்னை இயந்திரங்களையும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கத்திற்கான இடுபொருள்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

பின்னர் சனவேலி ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடையை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் பொருட்;கள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்ட ஆட்சியர், புல்லமடை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் முருகவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 16 Aug 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்