/* */

அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர் கைது

அஞ்சுகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்காப்பீடு தொகை ரூ.2.15 லட்சம் மோசடி. செயலாளர் கைது.

HIGHLIGHTS

அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர் கைது
X

கூட்டுறவு சங்க மோசடியில் ஈடுப்பட்ட செயலாளர் மணி.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீடு மற்றும் கடன் தொகை ரூ.2.15 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்த செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவில் மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் அளித்துள்ள புகாரில், திருவாடானை தாலுகா அஞ்சுக்கோட்டை தொடங்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மணி, ராமு, மற்றும் கற்பவள்ளி ஆகியோர் பயிர் கடனாக பெற்ற ரூ1லட்சத்து 29ஆயிரத்த 790, மற்றும் பயிர் காப்பீடு பிரிமியமாக செலுத்திய 84ஆயிரத்து 765 என மொத்தம் 2லட்சத்து 14ஆயிரத்து 555-ஐ சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் வரவு வைக்காமல் அப்போதைய கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மணி மோசடி செய்துள்ளது தணிக்கையில் தெரியவந்ததுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் வணிக குற்ற புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

Updated On: 30 Nov 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?