/* */

கூட்டுறவு சங்கத்தில் ஊழல்? -அலுவலகத்திற்கு சீல்

கூட்டுறவு சங்கத்தில் ஊழல்? -அலுவலகத்திற்கு சீல்
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக எழுந்த புகாரில் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவாடானை தாலுகா எட்டுகுடி கிராமத்தில் விவசாயிகளுக்கு சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே தமிழக அரசு கடன் தள்ளுபடி அறிவித்திருந்த நிலையில் அதற்கான சான்று வழங்கப்படாமல் நீடித்து வந்தது. அதனால் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட இணை இயக்குநர் நடுகாட்டு ராஜா, மேலாண்மை இணை இயக்குநர் ராஜலட்சுமி, வட்ட கிளை அலுவலர் ஆனந்த பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ய வந்தனர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்திற்கு வந்தபொழுது செயலாளர் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இதனால் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் இருமுறை ஆன நிலையில் மூன்றாவது முறையாக அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்றதால் கோபமடைந்த அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். அலுவலகத்திற்குள் ஆவணங்கள் இருக்கின்றதா? இல்லையா? கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் வருகிற திங்கட்கிழமை மீண்டும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On: 18 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?