/* */

தொடர் கனமழை: தொண்டி அருகே மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதம்

தொண்டி அருகே கனமழை காரணமாக வீட்டில் நின்றிருந்த இரட்டை வேப்பமரம் விழுந்து வீடு சேதமடைந்தது.

HIGHLIGHTS

தொடர் கனமழை: தொண்டி அருகே மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதம்
X

கனமழை காரணமாக தொண்டி அருகே வேப்பமரம் விழுந்து வீடு சேதமடைந்தது.

கனமழை காரணமாக தொண்டி அருகே வீட்டில் நின்றிருந்த இரட்டை வேப்பமரம் விழுந்து வீடு சேதமடைந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள தண்டலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா மேரி. இவரது கணவர் ஆல்பர்ட் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், திருவாடானையில் தையல் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது இரு மகன்களான ஆரோரிராஜு (16) மற்றும் அஸ்வந்த் ராஜ் (4) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீட்டில் நின்றுகொண்டிருந்த இரட்டை வேப்பமரம் வீட்டின் மீது சாய்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இரட்டை மரம் விழுந்து சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்து நிவாரணம் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். நல்வாய்ப்பாக வீட்டின் மீது மரம் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Nov 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...