/* */

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு
X

பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.

பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருவாடானை வட்டத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் சாலை போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப் பாலத்திற்கு மேலே மழைநீர் வெள்ளமாக செல்லும் சூழ்நிலை உள்ளது.

அதன்படி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ள கிளியூர், மங்களக்குடி, அஞ்சுக்கோட்டை, கோடானூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்காலிகவடிகால் அமைத்து வயலில் தேங்கியுள்ள மழைநீரை அருகே உள்ள கண்மாய் மற்றும் ஊரணிகளில் சேமித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பழங்குளம் ஊராட்சி மாணிக்கம்கோட்டை கிராமம் மற்றும் திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சாலை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தரைப்பாலத்தின் அருகே எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் திருவாடனை வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரியூர் கண்மாய் மற்றும் என்.மங்களம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

Updated On: 13 Nov 2021 7:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்