/* */

குப்பையில் வீசி சென்ற பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை.

உச்சிப்புளி அருகே குப்பையில் வீசி சென்ற பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குப்பையில் வீசி சென்ற பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை.
X

பைல் படம்

இராமநாதபுரம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதி குப்பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை குப்பையில் வீசி சென்றது யார் என்றும்,

தவறான வழியில் பிறந்த குழந்தையாக இருக்கலாமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறு குழந்தையை குப்பையில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ தம்பதியினர் குழந்தை இல்லாமல் தவித்து வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Jun 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்