/* */

கண்மாய் வழியாக சிக்கிய 15 கிலோ எடை கொண்ட மீன்

திருவாடானை அருகே ஆதியூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரில் 15 கிலோ எடை கொண்ட மீனை பிடித்த இளைஞர்கள்.

HIGHLIGHTS

கண்மாய்  வழியாக சிக்கிய  15 கிலோ எடை கொண்ட மீன்
X

15 கிலோ எடையுள்ள மீனை பிடித்த இளைஞர்கள் 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த வருடம் மழையினால் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல கண்மாய்களில் மீன் வளர்க்கப்பட்டது.

வளர்த்த மீன்களை கனமழையின் காரணமாக ஏலம் விடாத நிலையில், தற்பொழுது இந்த பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணமாக அனைத்து கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் கரைபுரண்டு வெளியேறுகிறது. அப்படி ஆதியூர் கண்மாயில் தண்ணீர் வெளியேற்றப்படும் இடத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

அப்போது திருவெற்றியூர் கிராமத்தை சேர்ந்த நவநீதன், அஜித், தண்டபாணி இவர்கள் மீன்பிடித்த பகுதியில் 15 கிலோ எடை கொண்ட பெரிய மீன் தென்பட்டது. உடன் சமயோசிதமாக செயல்பட்டு கம்பால் அடித்து மூவரும் அந்த பெரிய மீனை தப்பிக்க விடாமல் பிடித்தனர். கண்மாய் பகுதியில் இவ்வளவு பெரிய மீன் வேறு எங்குமே கிடையாது. கடலில் தான் இதுபோன்ற பெரிய மீன்களை காண முடிந்த நிலையில் கண்மாயில் இவ்வளவு பெரிய மீனை பார்த்த பொதுமக்கள், அதிசயத்து பார்த்தனர்.

Updated On: 15 Nov 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு