சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா

X
By - Saral, Reporter |19 Feb 2021 8:47 PM IST
இராமநாதபுரம்: சிங்காரவேலர் 162வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட், புக் வழங்கப்பட்டது.
சிந்தனை சிற்பி ம.வெ.சிங்காரவேலர் 162வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வேலாயுதம், மாவட்ட செயலாளர் மெய்யழகன் ஆகியோர் தொண்டி கடற்கரை அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவன் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினான். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட், புக், வாய்ப்பாடு ஆகியவற்றை மீனவர் பேரவை நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu