/* */

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்
X

படகுகளை நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள் - கோப்புப்படம் 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 448 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தங்கள் பகுதி எனக்கூறி, நான்கு படகுகளை பிடித்து, அதில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த மரிய வாஷிங்டன், 38, சக்திவேல், 40, வாழமுத்து, 50, பால்சாமி, 42, ஆகிய நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.

இதில், 12 மீனவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில், அவர்களை அக்., 27 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள, 15 பேர் மன்னார் காவல்நிலைய கஸ்டடியில் உள்ளனர். இன்று மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற 27 மீனவர்கள், ஐந்து விசைப்படகுகளை விடுவிக்க கோரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

அக்., 18ல் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியலில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றிஉள்ளனர்.

தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்

Updated On: 17 Oct 2023 3:53 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...