/* */

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது

வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர், இராமநாதபுரம் வந்தடைந்தது; 3000 கனஅடி கடலுக்கு திறந்துவிடப்பட்டது.

HIGHLIGHTS

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது
X

வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 11 ஆயிரம் கன அடி உபரிநீர் இராமநாதபுரத்தை வந்தடைந்தது. 

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு வழியாக பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.

இவ்வாறு வந்த தண்ணீரில், 9 ஆயிரம் கன அடி தண்ணீரை பார்த்திபனூரில் இருந்து இராமநாதபுரம் வரை 250-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பொதுப்பணித்துறையினர் தேக்கியுள்ளனர். அதுபோக, மீதமுள்ள 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து ஆர்.காவனூர் வழியாக ஆற்றங்கரை சென்று அங்கு கடலில் கலக்கிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், முழுமையாக தேக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகின்றது.

Updated On: 30 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்