Begin typing your search above and press return to search.
மருத்துவமனைக்கு வந்த போது கைதி தப்பி ஓட்டம்
மருத்துவமனைக்கு வந்த கைதி தப்பி ஓட்டம், 2 மணி நேரத்தில் மீண்டும் கைது.
HIGHLIGHTS
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 10 க்கும் மேற்பட்டோர் ஜன.21 ல் போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்களில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகமது மைதீன், முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட முகமது மைதீனை, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் பாதுகாப்புடன் இன்று காலை அழைத்து வந்தார். சிறுநீர் கழித்து வருவதாக கூறிச்சென்ற முகமது மைதீன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தப்பியோடிய முகமது மைதீன் குறித்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். போலீசார் உஷார்படுத்தப்பட்டு முகமது மைதீனை பல்வேறு இடங்களில் தேடினர். துரிதமாக செயல்பட்ட போலீசார் ஏர்வாடியில் பதுங்கியிருந்த முகமது மைதீனை சுற்றி வளைத்து பிடித்தனர்.