/* */

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பென்ட்.

வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பென்ட்.
X

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் டிசம்பர் 7 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணை தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்திலும் பேசி பேசுகின்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார், பெருமாள்கோவில் அரசு பள்ளியில் விசாரணை செய்து தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிசம்பர் 24 ஆம் தேதி ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சமூக அறிவியல் ஆசிரியர் விருதுநகரை சேர்ந்த ராமராஜ்(39,). போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 31 Dec 2021 9:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!