/* */

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 64வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 64வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு
X

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், வெங்கடேசன், சரவணக்குமார், ராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ் கனி, தனுஷ் குமார், இராமநாதபுரம் நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன்தங்கம், சேது கருணாநிதி(பரமக்குடி), ஒன்றிய பெருந்தலைவர்கள் பிரபாகரன்(இராமநாதபுரம்), சத்யா குணசேகரன்(போகலூர்), ச.புல்லாணி(திருப்புல்லாணி), ஒன்றிய செயலாளர் கதிரவன் (போகலூர்) மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் மற்றும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, கூட்டுறவு பனை வெல்ல சங்கத்தலைவர் பாலசிங்கம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பொறியாளர் பால்பாண்டி, அ.இ.அ.தி.மு.க அம்மா பேரவை துணைச் செயலாளரும், மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன், பரமக்குடி நகர் கிளை செயலாளர் ஜமாலுதீன், மற்றும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன்,மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில பட்டியலின தலைவர் பொன் பாலகணபதி, செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.நாகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.குமார், பரமக்குடி பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் கணபதி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், மற்றும் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, செயல் தலைவர் மயூரா, ஜெயக்குமார், இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், அமைப்பு சாரா அணிகளின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ம.தெய்வேந்திரன், நகர் தலைவர் கோபி, மாவட்ட பொதுச்செயலாளர் லயன் மணிகண்டன், மற்றும் கட்சியினுடைய நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அம்மா முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமை நிலைய செயலாளர் உமாதேவன்,கழக அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, அமைப்புச் செயலாளர் மகேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் துருக்கிரபீக் ராஜா, முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், மாணவரணி அமைப்பாளர் பாலா, மற்றும் கட்சியினுடைய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி,மற்றும் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேவேந்திர பண்பாட்டுக் கழகம் மற்றும் இமானுவேல் சேகரனார் பிறந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா, சக்கரவர்த்தி, மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Sep 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...