/* */

பரமக்குடி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

பரமக்குடி அருகே படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடத்துநர் உள்ளே வரச் சொன்ன ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

HIGHLIGHTS

பரமக்குடி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
X

பேருந்தில் பின்புற கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து கமுதக்குடி கிராமத்திற்கு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தொங்கியதால் நடத்துநர் திருப்பதி மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து மாணவர்கள் பேருந்தின் பக்கவாட்டில் கையால் அடித்து சத்தத்தை எழுப்பி உள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மூவர் காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபின் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 10 April 2022 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!