/* */

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது

ராமநாதபுரம் அருகே பாண்டியூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாண்டியூர் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அடைக்கப்பட்டார்.

பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை தரப்பினருக்கும், அதே ஊரை சேர்ந்த முத்துராமலிங்கம் தரப்பினருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனால் இருதரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சாமிதுரை என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சாமிதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து சாமிதுரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பாண்டியூர் ஊராட்சி தலைவியின் கணவர் என்பது குறிப்பிட தக்கது.

Updated On: 15 July 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...