/* */

'அந்த மனசு தான் சார் கடவுள்': கோடை காலத்தை 'ஜில்' ஆக்கிய ஆட்டோ ஓட்டுனர்

கொளுத்தும் வெயிலில் பொதுமக்களுக்கு ஆட்டோ ஓட்டுனர் இலவசமாக மோர் வழங்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்த மனசு தான் சார் கடவுள்: கோடை காலத்தை ஜில் ஆக்கிய ஆட்டோ ஓட்டுனர்
X

பொதுமக்களுக்கு மோர் வழங்கும் ஆட்டோ டிரைவர்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செய்யது கனி (45). இவர் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம், இலவச ஆட்டோ பயணம் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார்.

இதனை தொடர்ந்து கோடை வெயில் காரணமாக பரமக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு இலவசமாக மோர் வழங்கினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்.

அறிவுரை கூறுவது மட்டுமல்லாது இலவசமாக மோர் வழங்கி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  6. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  7. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  8. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  9. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!