/* */

இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்கள்: அரசு உத்தரவு

இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கீழப்பெருங்கரை, தெளிச்சாத்தநல்லூர், தெய்வேந்திர நல்லூர், வழுதூர் ஆகிய கிராம மக்கள் முதல்வரிடம் அளித்த மனு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழப்பெருங்கரை, தெளிச்சாத்தநல்லூர், தெய்வேந்திர நல்லூர், வழுதூர் ஆகிய கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில், தற்போது இந்த மூன்று கிராமங்களிலும் மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 18 July 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?