/* */

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி
X

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது,தமிழக அரசு விவசாயத்திற்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது.அனைத்து ஏரி, குளம் கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு கோடை காலத்தில் தேவையான நீரை தற்போதே தேக்கி வைத்திருக்கிறோம். காவேரி குண்டாறு இணைப்பிற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. காய்கனிகள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் அதை பாதுகாப்பாக வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை அமைக்கப்படும்.

அதில் அதிகப்படியான காய்கனிகள் உற்பத்தி ஆகும் போது இந்த அறையில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 75000 கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 2 Jan 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் வைகாசி விசாக விழா
  3. வந்தவாசி
    வந்தவாசி யோக நரசிம்மர் பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா
  4. வீடியோ
    இந்த பெருந்தன்மை தான் Isaignani | | Ilaiyaraaja செய்த சம்பவம் |...
  5. கோவை மாநகர்
    கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
  8. லைஃப்ஸ்டைல்
    வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. ஈரோடு
    டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்