/* */

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி

முதுகுளத்தூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முன்றதால் பரபரப்பு.

HIGHLIGHTS

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி
X

பைல் படம்.

முதுகுளத்தூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முன்றதால் பரபரப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த முனியசாமி- செல்வி என்பவரின் மகன் சபரீஸ்வரன் (21). இவர் மதுரையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாதபோது மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட சபரீஸ்வரன் உடலை காவல்துறைக்கு தெரியாமல் அவசர அவசரமாக அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றபோது வருவாய்த்துறை, காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தி உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சபரீஸ்வரன் இறப்பில் வேறு ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என தெரிய வருவதால் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் பழனி கொடுத்த புகாரின் பேரில் கீழ்த்தூவல் காவல் ஆய்வாளர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 2 Oct 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு