/* */

இராமநாதபுரம்: பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

இராமநாதபுரம்: பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது
X

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஹபீப்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு, அவர்களது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு கூறுவதோடு, வர மறுத்தால் மார்க் குறைவாக போட்டு பெயிலாக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும், அதுபோல் நீயும் வரவேண்டு மென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அலைபேசியில் ஆபாசமாக பேசிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் ஹபீப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துறையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 15 July 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  4. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  5. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  6. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  7. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  8. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா