Begin typing your search above and press return to search.
இராமநாதபுரம் மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து குளர்ச்சியான சூழல் நிலவியது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைக்கின்றது. இந்நிலையில் நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் திடீரென்று கோடை மழை பெய்தது. குறிப்பாக இராமநாதபுரம் நகர், முதுகுளத்தூர் சுற்று வட்டாரப் பகுதி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிடங்கள் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.