/* */

கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகள்: பொதுமக்கள் முற்றுகை

வளநாடு கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்து விட்ட அதிகாரிகள். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

HIGHLIGHTS

கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகள்: பொதுமக்கள் முற்றுகை
X

வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தை அடுத்த வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து தங்களது கிராமத்து கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீரை திறந்து விட்டதாக கூறி புகார்.

ராமநாதபுரம் மாவட்டம் வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு நடந்து கொண்டு தாங்கள் கண்மாயில் தேக்கி வைத்திருந்த மழைநீரை திறந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திராநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அங்குள்ள கண்மாய் நீரை பயன்படுத்தி 2500 ஏக்கர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பவனம் கிராம பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் கண்மாயில் உள்ள தண்ணீரை திறந்து விட்டதாக கூறி அதனால் தங்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு தங்களது பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 8 Dec 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது