Begin typing your search above and press return to search.
பேச்சில் உடன்பாடு: ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
கடந்த, 10 நாட்களாக நடந்து வந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 10 விசைப் படகுகளையும் 68 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றது தொடர்ந்து, அவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், வருகிற ஜனவரி 1-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
இதனிடையே, இன்று மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, வருகிற 3ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்றும், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும் முடிவு எடுத்துள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர். செய்தியாளர்களை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள், இதை தெரிவித்தனர்.