2 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

2 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

பைல் படம்.

தமிழகத்தில் 2ஆண்டுக்கு பின் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது என்பதை கள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்னை காரணமாக பள்ளிகள் சரிவர இயயங்கவில்லை. இதன் காரணமாக பள்ளிகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் காலாண்டு அரையாண்டு விடுமுறைகளுக்கும் வேலை இல்லாமல் போனது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு முறையாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புக்கு செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை எனவும், 6 முதல் 12-ம் வகுப்புக்கு செப். 30 முதல் அக்., 5 வரை விடுமுறை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

Tags

Next Story